×

விற்பனைக்கு வந்த கரும்புகள் அம்மாபேட்டை ஒன்றியத்தில் பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம் பணம் ஒதுக்கீடு செய்யவில்லை என அறிவிப்பு

தஞ்சை, ஜன.6: அம்மாப்பேட்டை ஒன்றியம் புளியக்குடி அங்காடியில் பலருக்கு பொங்கல் தொகுப்பு இல்லை என ஊழியர்கள் கூறியதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தஞ்சை அருகே அம்மாப்பேட்டை ஒன்றியம் புளியக்குடி அங்காடியில் 594 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் தற்போது பொங்கல் தொகுப்பு 534 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு தமிழக அரசு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கூறியதால் பொதுமக்கள் திரும்பி சென்றனர். இதனால் பொதுமக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து அம்மாப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: அம்மாப்பேட்டை அருகே புளியக்குடி அங்காடியில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. பலருக்கு பொங்கல் பரிசுத் தொகை ஒதுக்கீடு இன்னும் வரவில்லை என கூறுவது ஏற்புடையதல்ல. இது குறித்து விளக்க வேண்டும். பொதுமக்களை அலைகழிக்கும் போக்கை அங்காடி அலுவலர்கள் நிறுத்த வேண்டும். அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Announcement ,public ,Pongal ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...