×

மர்ம நபர்களுக்கு வலை கோரிக்கை மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சிறுபான்மையினருக்கு அழைப்பு

புதுக்கோட்டை, ஜன. 6: சிறுபான்மையினர் தங்களது கோரிக்கை மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தை சேர்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் தங்கள் புகார்களை தேசிய சிறுபான்மையினர் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்காக www.ncm.nic.in  http://www.ncm.nic.in என்ற இணையதளத்தில் சிறுபான்மையினர் வகுப்பை சார்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். புகார்களை பதிவு செய்தபின் உருவாக்கப்பட்ட தனித்துவமான அடையாள எண் மூலம் புகார்கள் அல்லது குறைகளின் நிலையை அறிந்து கொள்ளலாம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்கள் கோரிக்கைகளுக்கான மனுக்களை பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Minorities ,Mystery Persons ,
× RELATED 2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும்...