×

100 நாள் பணியின்போது மாரடைப்பால் பெண் தொழிலாளி சாவு

புதுக்கோட்டை, ஜன. 6: கீரமங்கலம் அருகே 100 நாள் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு பெண் தொழிலாளி இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே செரியலூர் இனாம் ஊராட்சி கரம்பக்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து மனைவி சிவயோகம் (65). இவர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் நேற்று அங்குள்ள குளம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த சிவயோகத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டது.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது