×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை காந்திகிராமம் விளையாட்டு திடலில் விளம்பர பலகையை அகற்ற வேண்டும்

கரூர், ஜன. 6: கரூர் காந்திகிராமம் விளையாட்டு திடலில் போடப்பட்டுள்ள விளம்பர பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் காந்திகிராமம் பகுதியில் சீரணி அரங்கத்துடன் கூடிய மைதானம் உள்ளது. மைதான திடலில் மாலை மற்றும் காலை நேரங்களில் இந்த பகுதி இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள இரும்புத்தூண்களுடன் கூடிய விளம்பரப் பலகை, மைதான வளாகத்தில் போடப்பட்டுள்ளது. இதனால், விளையாட்டு வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இதனை இந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் இதனை அப்புறப்படுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : playground ,Gandhigram ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்