×

செங்கம் நகரில் சுற்றித்திரிந்த 11 மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைப்பு: பேரூராட்சி நடவடிக்கை

செங்கம், ஜன.6: செங்கம் நகரில் சாலைகளில் சுற்றித்திரிந்த 11 மாடுகளை பிடித்து திருவண்ணாமலையில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். செங்கம் பேரூராட்சியில் போக்குவரத்து இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சாலை சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து திருவண்ணாமலையில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று செங்கம் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்த 11 மாடுகளை பேரூராட்சி ஊழியர்கள் மடக்கி பிடித்து, லாரி மூலம் திருவண்ணாமலை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை தொடரும் என பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தெரிவித்தார்.

Tags : town ,Kosala ,
× RELATED புதுகும்மிடிப்பூண்டியில் சோகம்...