×

தூத்துக்குடி, ஆறுமுகநேரி, குரும்பூர் பகுதியில் இன்று மின்தடை

தூத்துக்குடி, ஜன. 6:தூத்துக்குடி நகர்புற உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் பகுதிகளில் செல்லும்  உயரழுத்த மின்பாதையில் மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதனால் இன்று (6ம்தேதி) தூத்துக்குடி டூவிபுரம், அண்ணா நகர், மணிநகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நகர் கோட்ட செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்தள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன்குடி:திருச்செந்தூர் மின்வாரிய விநியோக பொறியாளர் பாக்கியராஜ் விடுத்துள்ள செய்திகுறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் இன்று (6ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9மணி முதல் பிற்பகல் 3மணி வரை புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags : areas ,Thoothukudi ,Arumuganeri ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...