×

சகோதரியை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு

நெல்லை, ஜன. 6: நெல்லை டவுனுல் சகோதரியை தாக்கிய தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள் ளனர். நெல்லை டவுனை சேர்ந்த மாரியப்பன் மனைவி முத்துலட்சுமி (30). சம்பவத்தன்று சொத்து பிரச்னை தொடர்பாக இவரது தம்பி பேராச்சி செல்வம், முத்துலட்சுமியை அவதூறாக பேசி தாக்கினார். இதுகுறித்து முத்துலட்சுமி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து செல்வத்தை தேடி வருகின்றனர்.

Tags : brother ,sister ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...