×

3பைசுஅள்ளியில் நாளை ஸ்டாலின் பேசுகிறார் திமுக மாவட்டபொறுப்பாளர் அழைப்பு

பென்னாகரம், ஜன.6: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடைபெற்று வரும் கொள்கையற்ற கொள்ளையர்களின் கொல்லைப்புற ஆட்சியை அகற்றி, தமிழ் நிலத்தினை மீட்க, தமிழ் மொழியை காக்க, தமிழரின் உரிமைகளை வென்றெடுக்க கழக தலைவர் ஸ்டாலின் ஓயாமல் உழைப்பதோடல்லாமல், அயராமல் அறவழியில் போராடி வருகிறார். இதற்கெல்லாம் ஒரே தீர்வு மக்கள் மன்றம் தான். தமிழகம் எங்கும் மக்கள் சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக நாளை (7ம் தேதி) அன்று காலை 9மணிக்கு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி, காரிமங்கலம் ஒன்றியம், பைசுஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெங்குசெட்டிப்பட்டியில் நடைபெறும் மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதுசமயம் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் வருகை தந்து, கழக தலைவரை வரவேற்றிடவும், மகளிர், இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Stalin ,
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...