×

திருமங்கலத்தில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு

திருமங்கலம், ஜன. 6: திருமங்கலம் பொற்கால நகரை சேர்ந்தவர் சக்திகுமார் (30). தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு சக்திகுமார் வெளியூருக்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் கதவை உடைத்து வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், பண்ட பாத்திரங்கள், ரொக்கபணம் 3 ஆயிரத்தை திருடி சென்றனர். அதே நாளில் இதே பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் பாலமுருகனின் (40) பூட்டிய வீட்டை உடைத்து அங்கிருந்த ரொக்க பணம் ரூ.88 ஆயிரம் பணம், வெள்ளி பொருள்களை திருடி சென்றனர்.  இதுகுறித்த புகார்களின்பேரில் டிஎஸ்பி விநோதினி, டவுன் இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Theft ,houses ,Thirumangalam ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...