பழநி, ஜன.6: மத்திய அரசைக் கண்டித்து பழநியில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய முற்றுகை போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் நேற்று பழநியில் எஸ்டிபிஐ கட்சியினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் முற்றுகையிட விடாமல் போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். போராட்டக்