×

ஜன.20ல் இறுதி பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

நாகர்கோவில், ஜன.6:  வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஜோதிநிர்மலா சாமி நாகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வாக்காளர் பெயர் சேர்ப்பு பணிகள் நடைபெற்றது. இது தொடர்பாக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் பெயர் சேர்க்கப்பட்டு வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் 20ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில் குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மேலாண்மை இயக்குநருமான ஜோதிநிர்மலா சாமி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் சப் கலெக்டர் சரண்யா அறி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் ஆர்டிஒ மயில், தேர்தல் பிரிவு தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ