×

கொரோனா தடுப்பூசிக்கான குளிர்பதன பெட்டி கோவை வந்தன

கோவை, ஜன. 6: தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளை பதப்படுத்துவதற்காக, 64 குளிர்பதன பெட்டிகள் சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. இதில், மொத்தமாக 99 லிட்டர் மருந்துகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்க முடியும். மேலும், இந்த 64 பெட்டிகளில் கோவைக்கு 24, ஈரோடு 15, திருப்பூர் 16, நீலகிரிக்கு 9 என பிரிக்கப்பட்டுள்ளது. இதனை பொருத்தும் பணிகள் விரைவில் துவங்கும் எனவும், பொங்கல் பண்டிகைக்கு பின் தடுப்பூசி போடும் பணிகள் துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Coimbatore ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு