×

மத்திய கூட்டுறவு வங்கி பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல்

ஈரோடு,  ஜன. 6:  ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர்  பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு  வரும் 11,12ம் தேதி நேர்காணல் நடக்கஉள்ளது. ஈரோடு மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர்,  எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21, 22ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடந்தது. இதில்  தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 11 ,12ம் தேதி ஆகிய  நாட்களில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புக் கடிதம் ஈரோடு மாவட்ட  ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.erddrb.in என்ற இணையதளத்தில் இருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...