×

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 

டெல்லி: கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும். அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது எனலாம். ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த நாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கனமழை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று நிலவிய மேல் காற்று சுழற்சி, இன்று, நவம்பர் 13, 2025 அன்று சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ வரை அதே பகுதியில் நீடித்தது, தெற்கு வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதிகளில், பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்கு அருகில், தீவிரமானது முதல் மிகவும் தீவிரமானது வரையிலான வெப்பச்சலனம் பரவியுள்ளது. தெற்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு அந்தமான் கடலின் மற்ற பகுதிகளில் மிதமானது முதல் தீவிரமானது வரையிலான வெப்பச்சலனம் பரவியுள்ள குறைந்த மற்றும் நடுத்தர மேகங்கள் பரவியுள்ளன.

இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த நாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

14-11-2025 மற்றும் 15-11-2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : Southeast Bank ,Indian Meteorological Centre ,Delhi ,Tamil Nadu ,
× RELATED வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு...