×

திருமணம் செய்து 2 பிள்ளைகளுடன் தவிக்க விட்டு அதிமுக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் 5 ஆண்டாக மாயம்: கடத்தப்பட்டதாக கூறி கலெக்டரிடம் மனைவி மனு

விருதுநகர்: மதுரை ஆனையூரை சேர்ந்த ரெஜினா தனது பிள்ளைகள் இருவருடன், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்து நேற்று மனு அளித்தார். பின் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வனின் உதவியாளராக இருந்தவர் ரவி (எ) இளையவன் ரவி. வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி என்னை திருமணம் செய்தார். தற்போது 6, நான்கரை வயதில் மகன்கள் உள்ளனர். முன்னாள் அமைச்சர் வைகை செல்வனின் தொடர்பில் இருந்த கோகிலாதேவி என்பவர், கணவர் ரவியை கடத்தி கடந்த 5 வருடங்களாக மறைத்து வைத்துள்ளார். தற்போது பலர் வீடு தேடி வந்து மிரட்டி, ரவிக்கும் எனக்கும் விவாகரத்து செய்ய கையெழுத்து கேட்டு என்னை மிரட்டுகின்றனர். என் கணவர் ரவியை மீட்டு தர வேண்டும். அதிமுக ஆட்சியில் கடந்த 5 வருடங்களாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கோகிலாதேவி, ரவியை இரண்டாவது திருமணம் செய்து மறைத்து வைத்திருப்பதாகவும் தகவல் வருகிறது. எனது கணவரை கலெக்டர், எஸ்பி ஆகியோர் மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post திருமணம் செய்து 2 பிள்ளைகளுடன் தவிக்க விட்டு அதிமுக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் 5 ஆண்டாக மாயம்: கடத்தப்பட்டதாக கூறி கலெக்டரிடம் மனைவி மனு appeared first on Dinakaran.

Tags : Virudunagar ,Regina ,Madurai Anayur ,Vrudunagar Collector's Office ,Dinakaran ,
× RELATED கடற்கரைகளை சுத்தம் செய்யும் ரெஜினா