×

மேற்கு மாவட்ட திமுக சார்பில் ‘மக்கள் கிராம சபை’ கூட்டம்

கோவை, ஜன. 5: கோைவ மாநகர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், சர்க்கார் சாமக்குளம் குரும்பபாளையம், சரவணம்பட்டி பகுதிக்கழகம் 27 வது வார்டு அஞ்சுகம் நகர், துடியலூர் பகுதிக்கழகம் 3 வது வார்டு சுப்பிரமணியம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிக்கழகம் 9-வது வார்டு ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் ‘மக்கள் கிராம சபை’ கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமை தாங்கி, பேசினார்.

இதில், கிராம மக்களின் குறைகள் கேட்கப்பட்டு, அதிமுகவை நிராகரிக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் டி.பி.சுப்பிரமணியன், வடவள்ளி துரைசாமி, மணி என்கிற விஜயகுமார், சுப்பையன், ஆனைகட்டி மதன், கே.எம்.சுந்தரம், தியாகராஜன், சுரேஷ், வெ.நா.பழனியப்பன், காளப்பட்டி பொன்னுசாமி, சிவா என்கிற பழனிச்சாமி, அருள்குமார், எஸ்.பி.சுரேஷ்குமார், சி.எம்.கிருஷ்ணகுமார், சுரேந்திரன், விஜயகுமார், தனக்குமார், பார்த்தீபன், மாலதி, மாணிக்கம் மயில்சாமி, டி.டி.எஸ்.மூர்த்தி, செல்வராஜ், கனகராஜ், திருநாவுக்கரசு, அருள்காந்தி, சந்திரசேகரன், கந்தசாமி, ராஜ்குமார், சிவக்குமார், கந்தசாமி, அரசூர் பூபதி, வி.ஆர்.ராஜன், ராஜகோபால், சூரியன் தம்பி, குருவை நந்தகுமார், திலீப், சுப்பிரமணியம், ராஜா, மதன்குமார், தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : meeting ,Grama Sabha ,DMK ,Western District ,
× RELATED கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்