×

பெண் தற்கொலை

ஈரோடு, ஜன.5: கோபி, ஏழுர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அமுதா (35). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மனைவி அமுதாவுக்கு மனநிலை பாதிப்பு இருந்தாக தெரிகிறது. இதையடுத்து, பெருந்துறை கே. எஸ்.பாளையத்தில் உள்ள் பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது பெட்ரூமிற்கு சென்ற அமுதா குழந்தைக்கு தொட்டில் கட்டும் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை