திருச்சி, ஜன.5: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்த வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் வாட்ஸ் அப் செயலி மூலம் 378 மனுக்கள் பெறப்பட்டது. இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான பல்வேறு மனுக்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.