×

5.78 லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து தரிசனம்

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 25ம் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சொர்க்கவாசல் திறப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இராப்பத்தின் 8ம் நாளான 1ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி அன்று மட்டும் சொர்க்கவாசல் பூட்டப்பட்டிருந்தது. கடந்த 8நாட்களாக பகல் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை திறக்கப்பட்டிருந்த சொர்க்கவாசல் வழியே 5,78,000 பக்தர்கள் கடந்து சென்று தரிசனம் செய்தனர். கடந்தாண்டு சொர்க்கவாசல் திறப்பில் 12,09,000 பக்தர்கள் கடந்து தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : devotees ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...