×

வேளாண் சட்டத் திருத்தங்களை கண்டித்து ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன.5: வேளாண் சட்டத் திருத்தங்களை ரத்து செய்யக் கோரி ஐனநாயக வாலிபர் சங்கத்தினர் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயத்தையும், விவசாயிகளையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத் திருத்தங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாய விரோத மத்திய அரசை கண்டித்து கடும் பனி பொழிவிலும் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இந்திய ஐனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமையில், புலிவலம் கடைத் தெருவில் இருந்து ஏர் கலப்பையுடன் பேரணியாக வந்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஐனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் தீபா, மாவட்ட தலைவர் முகமது சலாவூதீன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்