×

பொது விநியோகத்திட்டம், அரவைப்பணி ரயிலில் 1000 டன் அரிசி, நெல் மூட்டைகள்

திருவாரூர், ஜன.5: திருவாரூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக ஆயிரம் மெ.டன் அரிசியும், மதுரை மாவட்டத்திற்கு ஆயிரம் மெ.டன் நெல் முட்டைகள் அரவைக்காக சரக்கு ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்.30ம் தேதியுடன் முடிவடைந்த காரீப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 71 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டு வந்தன. மேலும், இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும் அரிசி மற்றும் நெல் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்களில் ஆயிரம் மெ.டன் அரிசியும், மதுரை மாவட்டத்திற்கு அரவைக்காக 21 வேகன்களில் ஆயிரம் மெ.டன் நெல் முட்டைகள் சரக்கு ரயில் மூலம் அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED பள்ளிகள் திறப்பையொட்டி...