×

திருத்துறைப்பூண்டி அருகே பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு 3 வாலிபர்கள் கைது


திருத்துறைப்பூண்டி, ஜன.5: திருத்துறைப்பூண்டி அருகே  பெண்ணிடம் 5 பவுன் தாலிச்செயினை பறித்துச்சென்ற அண்ணன், தம்பி உள்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் மெயின் ரோட்டில் கடந்த மாதம் 27ம் தேதி பீட்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனைவி தமிழரசி(26), அவரது வீட்டருகே இரவு பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் தமிழரசி கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையில், எஸ்ஐ சிவகுகன், குற்றப்பிரிவு எஸ்ஐக்கள் பிரான்சிஸ், ராஜேந்திரன், ஏட்டு தமிழ்வாணன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் நேற்று பெரிய சிங்களாந்தி நடுத்தெரு சுப்பிரமணியன் மகன் சாம்ராஜ்(25), இவரது தம்பிசஞ்சய்(22), அதே பகுதி தெற்கு தெரு அன்பழகன் மகன் குரங்குகுட்டி(எ)ஆனந்தன்(20) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.

Tags : teenagers ,Thiruthuraipoondi ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு