×

தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்

திருக்காட்டுப்பள்ளி, ஜன.5:திருக்காட்டுப்பள்ளியில் 4,518 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கூட்டுறவு பண்டகசாலை மூலம் திருக்காட்டுப்பள்ளியில் கடைஎண்1, கடை எண்2, ஒன்பத்துவேலி கடைஎண்1, கடை எண்2, மைக்கேல்பட்டி, புதுச்சத்திரம், நடுப்படுகை, கூடநாணல் கடைகளில் 4,518 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசாக வேட்டி, சேலை, ஒருகிலோ அரிசி, ஒருகிலோ சர்க்கரை, கரும்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் ரூ.2,500 பணம் ஆகியவை வழங்கும் பணி தொடக்க விழா நேற்று (4ம் தேதி) நடந்தது.

பண்டக சாலை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார். பண்டகசாலை மேலாளர் செந்தில் நன்றி கூறினார். கும்பகோணம்: கும்பகோணம் அருகே தாராசுரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க விழா நடந்தது. தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். எம்.பி வைத்திலிங்கம் பொங்கல் பரிசு தொகுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.முன்னாள் எம்எல்ஏக்கள் ராமநாதன், தவமணி, ராம்குமார் பலர் கலந்து கொண்டனர். தாராசுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பத்ம குமரேசன் வரவேற்றார். வேளாண்மை பணியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கோவி கேசவன் நன்றி கூறினார். திருவையாறு: திருவையாறில் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா திருவையாறு கூட்டுறவு வங்கித் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பொங்கல்பரிசு தொகுப்பை முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், ரெத்தினசாமி ஆகியோர் வழங்கி துவக்கி வைத்து பேசினர். திருவையாறு ஒன்றியத்தில் உள்ள 67 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Commencement ,Pongal ,district ,Tanjore ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...