×

விராலிமலை அருகே பைக் மீது கார் மோதி விவசாயி பலி

விராலிமலை, ஜன.5: விராலிமலை அருகே பைக்மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஓமாந்த நாயக்கர் மகன் பெரியசாமி (40), விவசாயி. இவர் நேற்று சொந்த வேலை காரணமாக விராலிமலை அருகே உள்ள வேலூர் பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்ல தனது பைக்கில் திருச்சி - மதுரை நெடுஞ்சாலை கொண்டமநாயக்கன் பட்டி பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பெரியசாமி திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Viralimalai ,
× RELATED இலுப்பூர் அருகே கிராமநிர்வாக அலுவலரை தாக்கி செல்போன் பறிப்பு