×

கழிவுநீர் வாறுகாலில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கிராம மக்கள் மனு

விருதுநகர், ஜன. 5: வெம்பக்கோட்டை கொருக்கான்பட்டி ஊராட்சி செல்லம்பட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொருக்கான்பட்டி ஊராட்சி செல்லம்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு காலமாக கழிவுநீர் சென்ற வாறுகால் பாதையை தனிநபர் ஒருவர் மூடி மறைத்துவிட்டார்.  இதனால், ஒட்டுமொத்த கழிவுநீர் செல்ல வழியின்றி ஊரின் நடுவே தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. தனிநபர் ஆக்கிரமிப்பை உள்ளாட்சி நிர்வாகிகள் அகற்ற கோரியும் அகற்றவில்லை. மாவட்ட கலெக்டர் தலையிட்டு கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு