விருதுநகர், ஜன. 5: விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள தகவல்: எரிச்சநத்தம் துணைமின்நிலையத்தில் நாளை (ஜன.6) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகபட்டி, ஜாரிஉசிலம்பட்டி, அ.பாரைப்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, ஐ.மீனாட்சிபுரம், முருகனேரி, அ.கரிசல்குளம், அக்கனாபுரம், சல்வார்பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, சுப்புலாபுரம், கொண்டையம்பட்டி ஆகிய கிராமங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.