×

செல்போன் டவர் அமைப்பதை தடுக்கக்கோரி மனு

தேனி, ஜன. 5: ஆண்டிபட்டி சக்கம்பட்டி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர் ஆண்டிபட்டி அருகே, சக்கம்பட்டியில் உள்ள தெற்கு தெருவைச் சேர்ந்த மக்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊரில் தெற்கு தெருவில் தனியார் இடத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. செல்போன் டவர் அமைத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, செல்போன் டவர் அமைப்பதை தடுக்க வேண்டும்’ என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு