×

சமையலர் பணிக்கு எழுத்து தேர்வு நடந்தது

மதுரை, ஜன. 5: மதுரை மாவட்டத்தில் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கல்வி விடுதியில் காலியாக உள்ள 43 சமையல் பணியிடத்துக்கு ஆட்கள் நியமிக்கப்படும் என அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. இதில், 31 ஆண்கள் சமையலர், 12 பெண் சமையலர் என மொத்தம் 43 சமையலர் பணியிடங்கள் இடஒதுக்கீடு முறையில் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 அசைவம், சைவம் உணவுகள் சுவையாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று 12 பெண் சமையல் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. காலை, மாலை என நடந்த இத்தேர்வில் 200க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, சமையல் தொடர்பான கேள்விகளுக்கு தேர்வு எழுதினர். தொடர்ந்து ஆண்களுக்கான எழுத்து தேர்வு, அதன்பின் இருவருக்குமான நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தலைமையில் அதிகாரிகள் நடத்தினர்.

Tags : writing test ,
× RELATED தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் எழுத்து...