×

தண்டவாளத்தில் ஆண் சடலம்

ஆரல்வாய்மொழி, ஜன.5:ஆரல்வாய்மொழியில் ரயில் மோதி இறந்த நிலையில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடந்தது. ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி  செல்லும் தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ரயிலில் அடிபட்டு தலை சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார். இப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்ற சிலர் இதனை பார்த்து ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் காலையில் சென்ற ஏதேனும் ஒரு ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சடலமாக கிடந்தவர் கட்டம் போட்ட லுங்கியும், நீல நிற சட்டையும் அணிந்து இருந்தார்.அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags :
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...