×

விழுப்புரம் அருகே பரபரப்பு விஷம் குடித்த பெண் சாவு கள்ளக்காதலன் கவலைக்கிடம் போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம், ஜன. 5: விழுப்புரம் அருகே இளங்காடு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கள்ளக்காதலனுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் அடுத்துள்ள இளங்காடு பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் ராஜதுரை (27), சென்னை வடபழனி அருகே உள்ள பேட்டரி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்த திருமணமானவர் மாலா (37). இவர் வேலை சம்பந்தமாக அடிக்கடி அவ்வழியே சென்று வந்துள்ளார். அப்போது, ராஜதுரைக்கும், மாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.  
 இதையடுத்து, 8 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மாலா ராஜதுரையுடன் அவரது சொந்த ஊரான இளங்காடுக்கு சென்றார்.

இருவரும் அங்கு குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் இருவரும் திண்டிவனம் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி இளங்காடு வந்த இருவரும் பள்ளி கொண்டான்புரம் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.   அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் போலீசார் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மாலா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ராஜதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து கள்ளக்காதலர்கள் கந்து வட்டி கொடுமையால் இறந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : death ,investigation ,Villupuram ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...