×

நெல்லையில் ஒரே ஜீப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் பிரசாரம்

நெல்லை, ஜன. 5: முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், மேலப்பாளையத்தில் இருந்து கருங்குளம் வரை ஒரே ஜீப்பில் பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு வழிநெடுக மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலப்பாளையத்தில் இருந்து முன்னீர்பள்ளம் வரை 2 கிமீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் ஆண்களும், பெண்களும் திரண்டு கையில் அதிமுக கொடியுடன் நின்று வரவேற்றனர். திறந்த ஜீப்பில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றனர். கருங்குளத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலெட்சுமி, மாவட்ட அதிமுக செயலாளர்கள் (தென்காசி தெற்கு) செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, (தென்காசி வடக்கு) கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, எம்எல்ஏக்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், மனோகரன், மாநில அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், மகளிரணி செயலாளர் விஜிலாசத்யானந்த், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags : campaign ,OPS ,Nellai ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...