ஒடுகத்தூர், ஜன.4: அணைக்கட்டு அடுத்த ேவப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஒடுகத்தூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மாட்டுவண்டியை நிறுத்தி விசாரித்தனர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கடத்திய கெங்கசானிகுப்பம் கிராமத்தை சேர்ந்த மனோகரன்(60) என்பவரை கைது ெசய்தனர். மேலும் மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.