×

தொழிலாளி மனைவி தீக்குளித்து தற்கொலை

வீரவநல்லூர், ஜன. 4: வீரவநல்லூரில் தொழிலாளி மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அழகிரி. கூலி தொழிலாளி. இவரது மனைவி கமலம் (55). தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் 4 மகள்கள். 4 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. அழகிரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனிடையே கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் அவதிப்பட்டு வந்த கமலம்,  நேற்று மாலை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த வீரவநல்லூர் போலீசார், கமலத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை