×

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் காங். பொருளாளர் ரூபி மனோகரன் உறுதி

நெல்லை, ஜன.4:  வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் என்று, காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரன்,  கூறியதாவது: நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு முக்கியக் காரணம், காமராஜர் தான். அவர் தந்த இலவசக் கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேறியவன்,
எனக்கு பொருளாளர் பொறுப்பு தந்த கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி, இளம்தலைவர் ராகுல்காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு இந்தநேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

எனக்குத் தரப்பட்டுள்ள பொருளாளர் பதவியில், மிகச் சிறப்பாக பணியாற்றுவேன். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கிராமங்கள் வரையிலும் சென்று கட்சியைப் பலப்படுத்துவேன். விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் - தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. இந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு,  தற்போது அனைத்துத் துறைகளிலும் முடங்கிக் கிடக்கும் நம் தமிழகம், மீண்டும் புதிய எழுச்சிப் பெறும். மாநிலத்தைப் போலவே மத்தியிலும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசுக்கு விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ராகுல்காந்தி பிரதமர் ஆக, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தயாராகி வருகிறார்கள். இவ்வாறு ரூபி மனோகரன் கூறினார்.தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Congress-DMK ,assembly elections ,Ruby Manokaran ,coalition ,constituencies ,
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...