×

ஒப்பந்த டிரைவர் பணி நியமனத்தில் குளறுபடி

தம்மம்பட்டி, ஜன.4: தம்மம்பட்டியில் 33 படுக்கை வசதியுடன், வட்டார தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் கீழ் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் தாய், சேய்களை, அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச்செல்ல, ஜே.எஸ்.எஸ்.கே. திட்டத்தில் இயக்கப்படும் அரசு வாகனம் உள்ளது. இதை இயக்க ₹15,500 என்ற மதிப்பு ஊதியத்தில், ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவர்.

தம்மம்பட்டியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இப்பணிக்காக காத்திருந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஜீப் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்று, மாதந்தோறும் ஓய்வூதியம் பெறும் அண்ணாதுரை என்பவரை,  ஜே.எஸ்.எஸ்.கே. திட்ட வாகனத்தை இயக்க மதிப்பூதியத்தில், ஒப்பந்த ஓட்டுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணிக்காக ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுபவருக்கு, மதிப்பூதியம் வழங்கும் பணியை வழங்கி இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED கத்திமுனையில் டூவீலர் பறிப்பு