×

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வு மாவட்டத்தில் 4359 பேர் எழுதினர்

நாமக்கல், ஜன.4: நாமக்கல் மாவட்டத்தில் சப்-கலெக்டர் மற்றும் டிஎஸ்பி பணிக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வை 4,359 பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 66 பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் முதல்நிலை போட்டி ேதர்வு நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களில், குரூப் 1 பதவியிடங்களுக்கான முதல்நிலை போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது.7 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற்றிருந்தனர். ஆனால் நேற்று நடைபெற்ற தேர்வினை 4,359 தேர்வர்கள் எழுதினர். 2641 பேர் தேர்வு எழுத வரவில்லை.

காலையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ், நாமக்கல் வடக்கு அரசு மேல் நிலைப்பள்ளி, நாமக்கல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்வினை நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வு பணிகளில் 25 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 25 ஆய்வு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தரைத் தளத்திலேயே தேர்வு எழுத, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செல்போன், கால்குலேட்டர் மின்னணு, கைகடிகாரங்களை மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லை. மையங்களுக்கு தேர்வர்கள் செல்ல சிறப்பு பேருந்துகள் வசதி செய்யப்பட்டிருந்தது. தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : exam district ,DNPSC Group 1 ,
× RELATED இன்று பிளஸ்2 தேர்வு மாவட்டத்தில் 14...