×

பல்லாவரம் அருகே தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

பல்லாவரம்: பல்லாவரம் அருகே தந்தை திட்டயதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், விசுவாசபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் இக்னியஸ்சுந்தர். இவரது மனைவி முத்துலெட்சுமி .இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் சேவியர்பிரகாஷ் அஜய் (18). இவர், தந்தையுடன் வசித்து வந்தார். அஜய், ஐடிஐ முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி திறக்காததால் அதே பகுதியில் சென்ட்ரிங் வேலையும் செய்து வந்தார். சமீப காலமாக அஜய், தனது தாயிடம் போனில் பேசி வந்தார்.

இதனை தந்தை சுந்தரம் கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக அஜய் மனமுடைந்த நிலையில், யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜய் வீட்டின் படுக்கையறை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சங்கர் நகர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,Pallavaram ,
× RELATED செங்கல்பட்டில் அனைத்து கட்சி...