×

கோயில்களின் பூட்டை உடைத்து கொள்ளை

கும்மிடிப்பூண்டி: 3 கோயில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளைபோனது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் லட்சுமி அம்மன் கோயில் உள்ளது. நேற்று கோயிலின் பூட்டு உடைத்து உண்டியலில் இருந்த ரூ.15 ஆயிம்  கொள்ளைபோனது. இதேபோல் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த 1.5 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், பொன்னேரி தாலுகா பட்டுபள்ளி கிராமத்தில் ஆச்சியம்மன்  கோயிலின் பூட்டை உடைத்து 1 சவரன் நகை கொள்ளைபோனது. புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : temples ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு