×

சிவகாசியில் பக்தர்கள் பாதயாத்திரை

சிவகாசி, ஜன.4: சிவகாசியில் திருப்பாவை, திருவெம்பாவை திருவிழா குழுவின் சார்பில் 30 வது ஆண்டு புனித பாதயாத்திரை நேற்று நடைபெற்றது. சிவகாசி சிவசுப்பிரமணியசாமி கோயிலில் இருந்து அதிகாலை 5 மணிக்கு ஆராதனை பூஜையுடன் புறப்பட்டு மல்லி, ஆண்டாள் கோயில், மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு மல்லி, முள்ளிகுளம் தென்பழனி பாலமுருகன் கோயில், மதியம் மடவார் வளாகம், வைத்தியநாதசாமி கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. பாதயாத்திரையில் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பாவை, திருவெம்பாவை பக்தர்கள் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Devotees ,Sivakasi ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி