×

சாத்தூரில் மழையால் சகதிக்காடான தாயில்பட்டி சாலை வாகன ஓட்டிகள் அவதி

சாத்தூர், ஜன. 4: சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசிக்கு செல்லும் சாலை, மழைக்கு சேறும், சகதியுமாவதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசிக்கு செல்லும் சாலையில் அண்ணா நகர், படந்தால் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சாலையோரம் பைப் பதிக்க பள்ளம் தோண்டி, பணி முடிந்த பின் மூடியும் வருகின்றனர். இந்நிலையில், பள்ளம் தோண்டுவதால் வெளியேறும் களிமண்ணை சாலையோரம் கொட்டுகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால் சாலையின் ஓரம் சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, சாலையோரம் கொட்டப்பட்ட களிமண்ணை அகற்ற, சாத்தூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road motorists ,Sattur ,
× RELATED அரசு நிதியில் முறைகேடு பாஜ ஊராட்சி...