×

குரூப் 1 தேர்வில் 2,090 பேர் ஆப்சென்ட்

தேனி, ஜன. 4: தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் 2,090 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சப்கலெக்டர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதன்மைத் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. இத்தேவு எழுத தேனி மாவட்டத்தில் 4406 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று தேர்வு நடந்தது. 237 அதிகாரிகள் தேர்வை கண்காணித்தனர். விண்ணப்பித்த 4,406 பேரில் 2,116 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2,090 பேர் ஆப்சென்ட் ஆகினர். இரண்டு பறக்கும் படை, நான்கு நடமாடும் கண்காணிப்பு குழு ஆகியவை தேர்வை கண்காணித்தன. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஒரு  வீடியோகிராபர் என மொத்தம் 17 வீடியோ கிராபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுதினர்.

Tags : Group 1 ,examination ,
× RELATED 90 காலி பணியிடங்களுக்கான குரூப் -1 தேர்வு அறிவிப்பு: எப்போது தெரியுமா?