×

புல் அறுத்தபோது பாம்பு கடித்த பெண் பலி

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.4: உப்பூர் அருகே வயல் வெளியில் புல்அறுக்கும் போது பாம்பு கடித்து பெண் பலியானார். உப்பூர் அருகே உள்ள மேலச்சேந்தனேந்தலை சேர்ந்த பாலு மனைவி காளியம்மாள்(65). இவ மாடுகளுக்கு வயல் வரப்பில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை பாம்பு கடித்து விட்டது. முதலில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும், அடுத்து மேல்சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அ்ங்கு காளியம்மாள் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...