×

வேலுநாச்சியார் சிலைக்கு மாலை

சிவகங்கை, ஜன.4: சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 291வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று பையூர் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் முன்னாள் எம்பி செந்தில்நாதன், மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணிபாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தாசில்தார் மைலாவதி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நாகராஜன், அசோகன், கருணாகரன், சசிக்குமார், ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்