×

துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.01 கோடிக்கு பருத்தி ஏலம்

துறையூர், ஜன.4: துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.01 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு கோட்டாத்தூர், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், மண்பறை, வாலீஸ்புரம், து.களத்தூர், அம்மாபட்டி, கீழக்குன்னுப்பட்டி, கோணப்பாதை, திருத்தலையூர், கொல்லப்பட்டி, நடுவலூர், நாகலாபுரம், அம்மம்பாளையம், வடக்கு நல்லியம்பட்டி, வெங்கடாசலபுரம், புலிவலம், ஒக்கரை, கிருஷ்ணாபுரம், முசிறி, ஆலத்துடையான்பட்டி, சேர்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 770 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலத்தில் விற்பதற்காக கொண்டு வந்தனர்.

ஏலத்தில் கும்பகோணம், விழுப்புரம், பண்ருட்டி, நாமக்கல், கொங்கனாபுரம், பேட்டைவாய்த்தலை, செம்பனார்கோவில், மகுடஞ்சாவடி, மூலனூர், பெரம்பலூர், ஆத்தூர், அன்னூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 பருத்தி வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு குவிண்டால் பருத்தியை அதிகபட்சமாக ரூ.6,039க்கு ஏலம் கேட்டனர். மொத்தம் 1,872.72 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 1 லட்சத்து 59 ஆயிரத்து 815க்கு ஏலத்தில் விற்கப்பட்டது. திருச்சி விற்பனைக் குழு செயலாளர் சுகுமார், விளம்பரம் மற்றும் பிரசார கண்காணிப்பாளர் யாஸ்மின் மேற்பார்வையாளர்கள் தீபிகா, நிவேதா, கோகுலப்பிரியா, சுதா மற்றும் திருச்சி விற்பனைக் குழு பணியாளர்கள் முன்னின்று ஏலத்தை நடத்தினர்.

Tags : Thuraiyur Regulatory Sales Hall ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு