×

சம்பா பயிர் அறுவடைக்கு தயாரானதால் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஜன. 4: நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடன் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால் எந்த நேரமும் விவசாயிகள் அறுவடை செய்ய முடியும். அவ்வாறு அறுவடை செய்யும் போது விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பாக கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும். நெல் மூட்டைகள் தேங்காமல் இருப்பதற்கு கடந்த ஆண்டுகளை விட கூடுதலான கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும். அதேபோல் காலதாமதம் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளுக்கான தொகையை விவசாயிகளுக்கு உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வேண்டும். மாவட்டத்தில் நெல் சேமிப்பு கிடங்குகளையும் பாதுகாப்பான இடங்களில் நிறுவுவதற்கு இப்போதே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் செய்வதற்கான புதிய ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கான நேர்முகத் தேர்வுக்கான நடவடிக்கைகளையும் அரசு முன் கூட்டியே செய்திட வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாகராஜன் தெரிவித்தார்.

Tags : commune ,paddy procurement centers ,
× RELATED கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூ.,கட்சி அலுவலகம் திறப்பு