×

பணம் வைத்து சீட்டு விளையாடிய 19 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஜன.4: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 19 பேரை திருக்காட்டுப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:
திருக்காட்டுப்பள்ளி பூதலூர் சாலையில் உள்ளது சீர்மிகு மனமகிழ் மன்றம். இங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது. அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். அவர்கள் திருக்காட்டுப்பள்ளி பன்னீர்(64), முருகானந்தம்(54), முல்லைக்குடி கார்த்திகேயன்(33), ஒன்பத்துவேலி உமாதேவன்(55), சதீஷ்குமார்(38), ரெங்கநாதபுரம் மகேஷ்(30), விஜய்(32), குமரேசன்(27), மகாதேவன்(23), செந்தலை வெங்கடேஷ்(72), வானராங்குடி கங்காதரன்(37), அடஞ்சூர் வீரராகவன்(32), மைக்கேல்பட்டி சாலி(35), ரவி(56), கருப்பூர் ஜெயக்குமார்(39), நடுக்காவேரி வீரமணி(58), நத்தம் அய்யாராசு(52), கழுமங்கலம் ஆறுமுகம்(50), திருச்சினம்பூண்டி வெற்றிவேல்(38) என்பதும், அவர்கள் சீட்டு விளையாடியதும் தெரியவந்தது. சீட்டுக்கட்டுகள், வைத்து விளையாடிய பணம் ரூ.5,100 பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து 19 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு