×

பாலத்தில் குளம்போல் தேங்கிகிடக்கும் மழைநீர் பண்டாரவாடை பகுதியில் மின்கம்பியை உரசியபடி வளர்ந்த மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை

பாபநாசம், ஜன.4: பண்டாரவாடை வடக்குதச்சன்தெருவில் மின்கம்பியை உரசும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் அருகே பண்டாரவாடை வடக்கு தச்சன் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தத் தெருவில் ரேஷன்கடை, தபால் அலுவலகம் உள்ளன. இந்தத் தெருவில் வளர்ந்துள்ள மரமானது அடர்ந்து மின்கம்பியை உரசியபடி உள்ளது. காற்றின் வேகம் தீவிரமானால் மின்கம்பி அறுந்து கீழே விழுந்தால் விபத்து நேரும் அபாயமுள்ளது. எனவே இந்தச் சாலை வழியே செல்லும் பொதுமக்கள் நலன் கருதி மின்கம்பியை உரசும் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்ற மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : removal ,area ,pool ,Bandarawada ,bridge ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...