×

தஞ்சை மாவட்டத்தில் குரூப் 1 தேர்வினை 3,225 பேர் எழுதினர்

தஞ்சை, ஜன.4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய குரூப் 1 தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 3,225 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2,971 பேர் தேர்வு எழுதவில்லை. தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 பதவிகளுக்கான தேர்வு எழுத 6,196 பேர் விண்ணப்பம் செய்தனர். இத்தேர்வுகள் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் இதற்காக கரந்தை உமா மகேசுவரனார் மேல்நிலைப் பள்ளி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, அரசர் மேல்நிலைப் பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் பள்ளி, டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 21 மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 3,225 பேர் பங்கேற்று எழுதினர். பங்கேற்றோர் விகிதம் 52 சதவீதம். 2,971 பேர் தேர்வு வரவில்லை. கொரோனா தொற்று காரணமாக அனைத்து மையங்களிலும் தேர்வு எழுத வந்த அனைவரும் வெப்பமானி, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், அனைத்து மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.தேர்வு மையங்களுக்குத் தேர்வர்கள் செல்போன் மற்றும் மின்னணு தொடர்பான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

Tags : Tanjore ,district ,Group 1 ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று...