×

2,971 பேர் ஆப்சென்ட் திருக்காட்டுப்பள்ளியில் பிஎஸ்என்எல் ேசவை 2 நாட்களாக முடக்கம்

திருக்காட்டுப்பள்ளி, ஜன.4: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பிஎஸ்என்எல் டவர் சேவை முற்றிலும் தடைபட்டதால் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நேற்றுமுன்தினம் (2ம் தேதி) மதியம் திடீரென பிஎஸ்என்எல் நெட் ஒர்க் சேவை முடங்கியது. அவ்வப்போது நிற்பதும் பின்னர் வருவதும் நடப்பது தானே என்று நினைத்த வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை வரை வாடிக்கையாளர்கள் நெட் ஒர்க் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

இது குறித்து தொலைதொடர்பு அதிகாரிகளை கேட்டபோது, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி தொலைதொடர்பு பாதையில் ஆப்டிகல் பைபர் கேபிள் ஜாம் ஆகியதால் தடை ஏற்பட்டுள்ளதாகவும், எங்கு ஜாம் ஆகியுள்ளது என்பதை கண்டுபிடிக்க மிகவும் கஷ்டமாக உள்ளது என்றும், குடிநீர் பைப் லைன் போட, பாதாள சாக்கடை அமைக்க, கூட்டுக்குடிநீர் லையன் போட, சாலை பராமரிப்பு செய்ய என்று சாலைகயை தோண்டும்போது தொலைதொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டு அல்லது ஜாம்ஆகி இது போன்று பாதிப்புகள் ஏற்படுகிறது. இது போன்ற பணிகள் மேற்கொள்ளும் போது எங்கள் துறைக்கு தெரிவிப்பதில்லை. தெரிவித்தால் கேபிள் எங்கு பதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அடையாளம் காட்ட முடியும் என்றனர்.

Tags : BSNL ,Absent Thirukattupalli ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...