×

மணமேல்குடி அருகே ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டு

அறந்தாங்கி, ஜன.4: மணமேல்குடி அருகே ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள ஆடுகளை திருடி சென்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மணமேல்குடியை அடுத்த பானாவயல் பயிர்க்கொல்லையை சேர்ந்தவர் புஷ்பராணி. (45). இவர் சொந்தமாக செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி கண்மாய் பகுதியில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். அவரது பட்டியில் இருந்து திடீரென்று ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 41 ஆடுகளை திருடி சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து புஷ்பராணி கொடுத்த புகாரின்பேரில் ஆடுகளை கடத்தியதாக புதுக்குடியை சேர்ந்த ராஜா, மணமேல்குடியை சேர்ந்த பெரியசாமி, பாப்பனூரை சேர்ந்த முத்து ஆகியோர் மீது, மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.

Tags : Manamelkudi ,
× RELATED புதுக்கோட்டையில் சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி